search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துல்லிய தாக்குதல்"

    நிலம், ஆகாயம், விண்வெளி ஆகியவற்றில் துல்லிய தாக்குதல் நடத்தும் துணிச்சலை இந்த அரசு காண்பித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். காங்கிரஸ் ஒழிந்தால், வறுமையும் ஒழிந்து விடும் என்றும் அவர் தெரிவித்தார். #PMModi
    மீரட்:

    பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற தேர்தலையொட்டி, நேற்று உத்தரபிரதேசத்தில் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். மீரட் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தையும் இதே மீரட் நகரில் இருந்து தொடங்கினேன். அப்போது, நீங்கள் காட்டிய அன்பை வட்டியுடன் திருப்பித் தருவேன் என்று கூறினேன். மேலும், 5 ஆண்டு சாதனை அறிக்கையை வெளியிடுவேன் என்றும், அதுபோல், 60 ஆண்டுகளாக நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று எதிர்தரப்பிடம் கேட்பேன் என்றும் கூறினேன்.

    நான் சொன்ன மாதிரியே எனது சாதனை அறிக்கையை சில நாட்களில் வெளியிடப்போகிறேன். அத்துடன், கடந்த காலத்தில் நீங்கள் ஏன் செயல்படவில்லை, துரோகம் செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்பேன்.

    ஒருபுறம், வலிமையான வளர்ச்சி, மற்றொரு புறம் தொலைநோக்கு பார்வையற்ற எதிர்க்கட்சி. ஒருபுறம், காவலாளி. மற்றொரு புறம், களங்கப்பட்ட தலைவர்கள். இந்த தேர்தல், உறுதியான அரசுக்கும், உறுதியற்ற கடந்த காலத்துக்கும் இடையிலான போட்டி. இதில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதற்கு இங்கே கூடி இருக்கும் மக்களே சாட்சி.

    நான் இந்த நாட்டின் காவலாளி. இந்த காவலாளியின் அரசுதான், நிலம், ஆகாயம், விண்வெளி என அனைத்து பகுதிகளிலும் துல்லியத் தாக்குதல் நடத்துவதற்கான துணிச்சலை காண்பித்துள்ளது.

    செயற்கைகோள் தகர்ப்பு ஏவுகணை பற்றி நான் அறிவித்ததை நாடக கொட்டகை பற்றி பேசியதாக நினைப்பவர்களை பார்த்து அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை.

    இந்திய விமானப்படை துல்லிய தாக்குதல் நடத்தியபோது, சில எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்டன. அவர்கள் பாகிஸ்தானில் புகழ்பெற விரும்புகிறார்கள். மக்கள், இந்திய கதாநாயகனை விரும்புவார்களா? பாகிஸ்தான் கதாநாயகனை விரும்புவார்களா?

    காங்கிரஸ் கட்சி, ஏழைகளுக்கு பணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஏழைகளுக்கு வங்கிக்கணக்கு தொடங்க முடியாதவர்கள், இப்போது வங்கிக்கணக்கில் பணம் போடுவதாக சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம்?

    நான் குழந்தையாக இருந்தபோது, ‘வறுமையை ஒழிப்போம்’ என்று இந்திரா காந்தி கோஷமிட்டதை கேட்டிருக்கிறேன். ஆனால், ஏழைகளுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தே வந்துள்ளது. வறுமைக்கு காரணமே காங்கிரஸ்தான். காங்கிரஸ் கட்சி ஒழியும்போது, வறு மையும்ஒழிந்து விடும்.

    உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் அமைத்துள்ள கூட்டணி, மதுபானம் போன்றது. இவர்கள், ஒருவரை ஒருவர் சிறையில் தள்ளவே பாடுபட்டு வந்தனர். இப்போது, உத்தரபிரதேசத்தை கொள்ளையடிக்க ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய எனது அரசின் உதவியை ஒருபோதும் கேட்டதே இல்லை.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. அதனால் ஆங்காங்கே குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. ஆனால், 2014-ம் ஆண்டுக்கு பிறகு அவை நின்று விட்டன. நாடு இப்போது பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது.

    இருப்பினும், கலப்பட கூட்டணி தலைவர்கள், என்ன செய்தாவது அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று முயன்று வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால், நாடு பின்னோக்கி சென்று விடும். ஆகவே, பா.ஜனதாவுக்கே வாக்களியுங்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 
    சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே, ராமர் கோவிலுக்கு அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #ParlimentElection #SurjicalStrikes #Demonetizaiton #UrjitPatel #RamarTemple
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சாமானியர் மற்றும் மெகா கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும். நான் சாமானியரின் பிரதிபலிப்பு தான்.

    பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல் (சர்ஜிகல் ஸ்டிரைக்) துணிச்சலான நடவடிக்கை. இந்த துல்லிய தாக்குதல் நடத்திய வீரர்கள் குறித்து கவலை கொண்டிருந்தேன். அவர்களில்
    எந்த ஒரு வீரரும் உயிரிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.



    ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் தாமதப்படுத்தியது. சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே, ராமர் கோவிலுக்கு அவசர சட்டம் கொண்டுவருவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

    ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகியதில் அரசியல் நிர்பந்தங்கள் ஏதும் இல்லை. உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி ஆளுநராக சிறப்பாக பணியாற்றினார். அவர் சொந்த காரணங்களுக்காகவே பதவி விலகினார்.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஒரு சிலர் மட்டுமே கருப்பு பணத்தை தாமாக முன்வந்து திரும்ப செலுத்தினர். நாட்டை நான்கு தலைமுறைகளாக ஆட்சி செய்து வந்தவர்கள் பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். #PMModi #ParlimentElection #SurjicalStrikes #Demonetizaiton #UrjitPatel #RamarTemple
    மோடியும், அனில் அம்பானியும் இணைந்து ராணுவத்தில் ரூ.1¼ லட்சம் கோடிக்கு துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். #Rafale #Modi #AnilAmbani #RahulGandhi
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2016-ல் மோடி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

    இந்தநிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அளித்த பேட்டியில், ‘போர் விமான ஒப்பந்தத்தில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது. எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார். இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது. ஹாலண்டே பிரான்ஸ் அதிபராக இருந்தபோதுதான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, நினைவு கூரத்தக்கது.



    இதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேயின் கருத்து, பிரதமர் மோடி ஒரு திருடர் என்பதற்கு உறுதியான ஆதாரமாக அமைந்து உள்ளது. அது நமது பிரதமரை திருடர் என்று கூறுகிறது. எனவே இந்த விவகாரத்தில் தனது பெயர் அடிபடுவது பற்றி மோடி தெளிவு படுத்தவேண்டும். ஏனென்றால் பிரதமர் ஊழல்வாதி என்பதில் நாங்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதேபோல் நாட்டின் பாதுகாவலரான பிரதமர் திருடர் என்பது நாட்டு மக்களின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது.

    எனவே ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஹாலண்டே கூறியிருப்பது பற்றி மோடி விளக்கம் அளிக்கவேண்டும். இதில் ஏன் பிரதமர் மவுனம் சாதிக்கிறார் என்று தெரியவில்லை. ஏனென்றால் இது நாட்டின் பாதுகாப்பு படை பற்றிய விவகாரம். ஊழல் தொடர்பான விஷயம்.

    ஹாலண்டேயின் கருத்தை ஏற்றுக் கொள்கிறாரா?...அல்லது ஹாலண்டே பொய் சொல்கிறாரா? என்பது பற்றி பிரதமர் மோடி விளக்கவேண்டும். இதில் எது உண்மை என்பதை அவர் தெளிவு படுத்த வேண்டும்.

    ரபேல் போர் விமான முறைகேடு விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேயையும் அழைக்கலாம்.

    மோடியை இந்த விவகாரத்தில் பாதுகாப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியின் பல்வேறு ராணுவ மந்திரிகளும் பொய் சொல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பதிவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல்(சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தியதை மோடி அரசு பெருமையாக கூறுவதை ரபேல் போர் விமான ஒப்பந்தத்துடன் தொடர்புபடுத்தி கிண்டல் செய்தார்.

    அவர், “பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் இணைந்து இந்திய ராணுவத்தின் ரூ.1.30 லட்சம் கோடி மீது துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்கள் சிந்திய ரத்தத்தை நீங்கள்(மோடி) அவமதித்து உள்ளர்கள். இது வெட்கக் கேடானது. மேலும் நீங்கள் இந்தியாவின் ஆன்மாவிற்கு துரோகமும் செய்து விட்டீர்கள்” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். Rafale #Modi #AnilAmbani #RahulGandhi 
    ×